ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சியை இம் முறை நடைபெறவிருக்கும் எதிர் வருகின்ற பொது தேர்தலில் சரிசெய்வோம் என ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (16) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
சிறுபான்மை சமூகத்தின் திருகோணமலையில் இருந்து ஒரு பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எமது கடமை டெலிபோன் கட்சியின் சஜீத் அணியில் போட்டியிடுவோர்களில் 60 ஆயிரம் வாக்குகளை பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் 30 ஆயிரம் வாக்குகளை பெறுவேன் என்றும் எடுத்துக் கூறிய அவர் தன் மீது பீதியின் காரணமாக டெலிபோன் அணியினர் சுயேட்சை குழு என்று ஐக்கிய தேசிய கட்சியை விமர்சிப்பது சிறுபிள்ளை தனமான அரசியலாகும் நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் அல்ல குறித்த கட்சியில் உறுப்பினர் கூட இல்லை திருகோணமலையில் சிறுபான்மை சமூகத்துக்காக கட்சியை உருவாக்கி சட்டரீதியாக பதிவு செய்துள்ளேன் அரசியலுக்கான அனுமதி காரணமாகவே இக் கட்சியில் களமிறங்கியுள்ளேன் சிலர் கட்சியினை விமர்சிக்கிறார்கள் சிறுபான்மை இனத்தை பாதுகாக்க கூடிய ஆளுமை உள்ள சக்தியாக உள்ளோம் என்றார்.