அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களான சங்குமண்கண்டி செல்வபுரம் கோமாரி தங்கவேலயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மக்களுக்கு மக்களுக்கு நேற்று-15- புதன்கிழமை ஒருதொகுதி உலருணவு 150 நிவாரணப்பொதிகள் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.
பிரித்தானியா சைவத்திருக்கோயில்கள் உன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் ஏழாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் மேற்படிகிராமங்களில் இப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யாழ்.பல்கலைக்கழகமாணவன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் அப்பகுதி ஆலயங்களில்வைத்து இவ் உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தலைவர் எஸ்.மோகன் கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ. தினேஸ்குமார் மற்றும் கிராமசேவையாளர் திட்டஉத்தியோகத்தர் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.
ஏலவே கல்விமற்றும் சமுக செயற்பாட்டாளர் இணைப்பாளர் சோ வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் மூரிச் அன்பேசிவம் பிரிட்டன் சிவகாமி அறக்கட்டளை நிதியம் போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டி பளவெளி அட்டப்பள்ளம் காரைதீவு வீரச்சோலை மத்தியமுகாம் அன்னமலை ஆலையடிவேம்பு நாவற்காடு மளவராயன் கிராமம் போன்ற ஆகிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.