நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணீர் எமில்டன் தோட்டத்தில் கோரோனா வைரஸ் பரவல் காரணமாக உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அத்தோட்டத்தில் வாழும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் அத்தோட்ட ஆலயத்தின் முன்பாக நேற்று (15) உள்ள வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமில்டன் தோட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் எதுவும் முறையாக கொடுப்பதில்லைஇ என்றும் இவை கட்சி பார்த்து கொடுக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் சிபாரிசு செய்த கொடுப்பனவுகள் கூட கிராம சேவகர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்களால் வழங்கப்படுவதில்லை. என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் எவருடைய துணையுமின்றி பல முதியோர்கள் உள்ளனர்,அவர்களுக்கு இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.பலர் நோய்வாய்ப்பட்டு பல வருட காலமாக வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
அவர்களின் துணைவியர்கள் தான் கூலி வேலை செய்து அவர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு எவ்வித வாழ்வாதார வசதியுமின்றி உள்ளனர்.இவர்கள் காலத்தை எவ்வாறு கடத்துவது சமூர்த்தி கொடுப்பனவுகள் உள்ள ஒரு சிலருக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஏனையவர்கள் தொழிற்சங்கம் பார்த்தே கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது என இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அண்மையில் கொடுத்த கொடுப்பனவு ஒரு கட்சியின் தலைவர் வீட்டில் நான்கு பேருக்கு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாத்திரம் எப்படி அவ்வாறு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம் நிவாரணம் கிடைத்தவர்களுக்கே இரண்டு மூன்று தடைவைகள் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் எவ்வித நிவாரணமும் இன்றி பலர் இருக்கிறார்கள் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஐந்து கிலோ அரிசி தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஆறு ஏழு பேர் சாப்பிட வேண்டும் இதனை கொண்டு எவ்வாறு முழு குடும்பமும் சாப்பிடுவது? என்று கேள்வி எழுப்புகின்றனர்.எனவே இது குறித்து உரியவர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.