வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கி கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!

எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கி கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வாழைச்சேனை கண்ணகிபுரம் கிராம பொதுக் கட்டடத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் எம்.எச்.எம்.முஹம்மது ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை சமூர்த்தி வங்கி தலைமை அதிகாரி கதிர்காமத்தம்பி தேவமனோகரி, விசேட பேச்சாளராக மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அருசியா உம்மா, பிரதேச மக்கள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்.
இதன்போது தேசிய சேமிப்பு வங்கியினால் கலந்து கொண்ட அதிதிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தேசிய சேமிப்பு வங்கியினால் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -