வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கி கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வாழைச்சேனை கண்ணகிபுரம் கிராம பொதுக் கட்டடத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் எம்.எச்.எம்.முஹம்மது ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை சமூர்த்தி வங்கி தலைமை அதிகாரி கதிர்காமத்தம்பி தேவமனோகரி, விசேட பேச்சாளராக மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அருசியா உம்மா, பிரதேச மக்கள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்.
இதன்போது தேசிய சேமிப்பு வங்கியினால் கலந்து கொண்ட அதிதிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தேசிய சேமிப்பு வங்கியினால் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.