மகுடம் தமிழ்த்தின விழா



அஸ்ரப் ஏ சமத்-
மேல்மாகண கல்வித் தினைக்களத்தின் தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த 5வது வருடமாக மகுடம் (தமிழ்த்தின விழா) நிகழ்வு நேற்று முன்தினம் 02 பானந்துறை ஜீலான் மத்திய கல்லுாாியில் உதவி கல்விப் பணிப்பாளா் இரா. உதயக்குமாா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதிப் பிரதம செயலாளா், சிறிவர்த்தனா மேல்மாகாண கல்விப் பணிப்பாளா் ஸ்ரீலால் நோனிஸ், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபா் அரசரட்ணம், பேராசிரியா் மொளனகுரு, கல்வியமைச்சின் அருகில் உள்ள பாடசாலை திட்டத்தின் பணிப்பாளா் பத்மநாதன், வலயக் கல்வித் திணைக்களத்தின் உதவி கல்விப் பணிப்பாளா்களும் கலந்து கொண்டனா்
இந் நிகழ்வின் போது கொழும்பு .களுத்துறை ,கம்பகா மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலை அதிபா்கள் ஆசிரியா்கள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வின்போது சிறந்த பாடசாலைகள், அழகான தோற்றம் சுத்தம் சூழல் போன்றவற்றைக் கொண்ட பாடசாலைகளுக்கு வெற்றிக் கின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த்தினம் ,மீலாதுன்நபி விழாக்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் வெற்றிக் கின்னங்களும் சான்றிாழ்களும் வழங்கி வைக்க்பட்டன. அத்துடன் படசாலை ஆசிரியா்களுள் பாடங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்த ஆசிரியா்கள் இங்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
அத்துடன் மேல்மாகாணத்தில் கல்விக்காக உதவிய மூவா் அதி கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா் வத்தளை பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுத்த மாணிக்கவசகா், அல் கிதாய பாடசாலையில் கூட்ட மண்டபத்தினை அமைத்துக் கொடுத்த கலாநிதி பகா்த்தீன் பேராசிரியா் மௌனகுருவும் கௌரவிக்கப்பட்டனா்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -