கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயமாணவர்கள் தேசிய மட்ட சதுரங்க போட்டிக்கு தெரிவு.



எம்.என்.எம்.அப்ராஸ்-

லங்கை தேசிய இளைஞர் சேவை சதுரங்க சம்மேளனத்தினால்
நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தேசிய மட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் 11வயதின் கீழ் பிரிவில் பங்குபற்றிய எஸ்.எல்.எப் . தஸ்னி என்ற மாணவி இரண்டாமிடத்தையும் எம்.ஜே.ஐ. ஸஹ்மி என்ற மாணவன் மூன்றாமிடத்தையும் பெற்றதன் மூலம் தேசிய மட்டத்திற்க்கு தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர் .

பாடசாலை வரலாற்ற்றில் முதன் முறையாக இப் போட்டிக்கு தேசிய மட்டத்துக்கு இவ் இரு மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் சதுரங்கப் போட்டிக்கு
பாடசாலையில் இருந்து பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்
கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

இவர்க ளுக்கு பயிற்றுவித்து
ஊக்கமளித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான
எம்.முபித் மற்றும் ஏ.ஜே.எம்.சாபித்

அவர்களுக்கு பாடசாலை அதிபர் ஏம்.ஐ. அப்துல் ரசாக் ,பிரதி அதிபர்காளான ஐ. எல்.ஏ.ஜின்னா ,ஈ.றினோஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இவ் தெரிவுப்போட்டி கடந்த சனிக்கிழமை( 02) கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -