இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- மலையக மக்களுக்கு நன்மை செய்வதாக இந்த அரசாங்கம் கூறி வந்தாலும் வரலாற்றிலிருந்து இம் மக்களுக்கு பல்வேறு இன்னல்களையும் ஏமாற்றங்களையுமே தந்துள்ளன.எனவே ஏமாற்றுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் நினைத்தால், இம் முறை ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
இன்று (01) நுவரெலியா அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
மலையக மக்களின் வாக்குரிமையினை முதலில்; 1947 ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் தான் பறிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி மலையக மக்களின் பொருளாதாரத்தினை சீர் குலைப்பதற்காக அன்று 1983 ஆண்டு வன்செயல்களை உருவாக்கி, எமது மக்களின் பல உயிர்களை காவு கொண்டு, எமது மக்களின் சோத்துக்களுக்கும் சேதமேற்படுத்தியவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் தான் என்பதனை எமது மக்கள் மறந்து விட கூடாது.அண்மையில் எமது மக்களின் வாக்குகளால் ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய தேசிய கட்சியினர.; பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து எமது மக்களை ஏமாற்றி உள்ளார்கள்,ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும். தலவாக்கலையில் வைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு தருவதாக தெரிவித்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் உருவாகி நாலரை ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இன்னமும் ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை.அதனை தொடர்;ந்து அமைச்சரவையில் 50 ரூபா கொடுப்பதாக தெரிவித்தார். அதனையும் இது வரை பெற்றுக்கொடுக்கவில்லை.அதனை தொடர்ந்து தீபாவளி முற்பணத்திற்கு மேலதிகமாக 5000 ரூபா தருவதாக தெரிவித்தார். அதுவும் இது வரை பெற்றுக்கொடுக்கவில்லை இந்த அமைச்சரவையில் தமிழ் முற்போக்கு அமைச்சர்கள் பலர் இருந்தும்,அதே அமைச்சரவையில் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் இருந்தும் அவர் இது தொடர்பாக எவ்வித கருத்துக்களும் வெளியிடவில்லை.அதற்கு தீர்வும் எட்டவில்லை.ஆகவே அதனை பெற்றுக்கொடுப்பதற்கு எமது கெபினட் அமைச்சர்களுக்கும். முதுகெலும்ப இருக்கவில்லை.
இந்நிலையில் தான் நாங்கள் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரிக்க வேண்டும.; என்று முடிவு செய்தோம்.கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் கடந்த காலங்களில் நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக இருக்கும் போது பல அபிவிருத்திகளை ஏற்படுத்தினார்.அது மாத்திரமின்றி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சி காலத்தில் தான், தோட்டப்பாதைகள் அபிவிருத்தி கண்டன ஆகவே எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தீர்வு காண்பார். என்ற நம்பிக்கை எமக்குள்ளதாக அவர் தெரிவித்ததுடன் இம்முறை கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு வாக்களித்து மலையகத்தில் ஒரு மாற்றத்தினை காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.