அவரது பணி நிறைவை முன்னிட்டு, நில அலங்காரப் பிரிவினரின் ஏற்பாட்டில் பிரியாவிடை நிகழ்வு, பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. எம்.ஏ. யாசீர் றிfப்கியின் வழிகாட்டலில் இடம்பெற்ற இன்நிகழ்விற்கு ஏ.என். நௌஷாட் தலைமை தாங்கினார்.
கௌரவ அதிதியாக பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்பு பிரிவு (Works and Maintenance Division) தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில் கலந்து கொண்டு, ஓய்வுபெறும் அதிகாரியை வாழ்த்தி உரையாற்றினார். நிகழ்வின்போது, நில அலங்காரப் பிரிவு உறுப்பினர்களால் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆதம்பாவா சம்ஷார் அவர்கள் B.Sc (Agri) (EUSL), MSc in Entomology & Ecology (UPDN), PGD in Landscape Design (UMRT) உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளை பெற்றவர். பணிக்காலத்தில் பல பசுமை மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, பல்கலைக்கழக வளாகத்தை இயற்கை அழகுடன் பராமரிக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். அவரது பணித்திறன், ஒழுக்கம் மற்றும் உழைப்புத் தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது.
நிகழ்வு நிறைவில் நன்றியுரை வழங்கப்பட்டு, இனிய நினைவுகளுடன் பிரியாவிடை கூறப்பட்டது.
.jpg)
0 comments :
Post a Comment