வடக்கும் கிழக்கும் முஸ்லிம் மற்றும் தமிழர் தாயகம் என்று கூட கூற முடியாத , திராணியற்ற தமிழரசுக் கட்சிக்கு எவ்வாறு நாங்கள் ஆதரவளிப்பது என்றும் யஹியாகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த தமிழரசுக் கட்சி - ஹர்த்தாலுக்காக முன்வைத்த காரணிகளில் ஒன்று கூட முஸ்லிம் சமுகம் சார்பாக எதையும் முன்வைக்கவில்லை.
முஸ்லிம் சமுகம் - கடந்த காலங்களில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதைக் கூட மறந்து அல்லது மறைத்து நாடகமாடும் இந்த கபட ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவது என்பது அபத்தமானது.
ஆகக் குறைந்தது - கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் - முஸ்லிம் சமுகத்துக்கு சாதகமான களநிலவரம் இருக்கும் போது கூட - அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் தமிழரசு கட்சியுடன் - பிரதேச சபைகளை கைப்பற்ற ஒன்று படும் தமிழரசுக் கட்சியுடன் குதுகலம் காணும் முஸ்லிம் காங்கிரஸ் குறித்து மக்கள் விழிப்பாகவே உள்ளனர்.
எனவே - நாளை மறுநாள் - தமிழரசுக் கட்சி விடுத்திருக்கும் ஹர்த்தால் அழைப்பை முஸ்லிம் சமுகம் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு - அரசாங்கத்தை சங்கடத்துக்கு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதனை - எமது கட்சி நோக்குவதாகவும் பார்ப்பதாக யஹியாகான் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment