விழிப்புலனற்றவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் அன்பளிப்பு.

காரைதீவு நிருபர் சகா-
ட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிப்பண்டிகையையொட்டி ஒருதொகுதி புத்தாடைகள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலினால் வழங்கிவைக்கப்பட்டன.

காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வெள்ளைப்பிரம்புதினத்தில் கிடைக்கப்பெற்ற உதவியைக்கொண்டு இப்புத்தாடைகள் வழங்கப்பட்டன.
கூடவே மேலுமொரு உதவிப்பொருட்களும் எல்ஈடி மின்விளக்கும் அன்பளிப்புச்செய்யப்பட்டன.
இதேவேளை லண்டனில் வாழும் காரைதீவு அன்பரான எஸ்.பாலசுரேஸ் விழிப்புலனற்றோரின் இசைக்குழுவிற்கென அன்பளிப்புச்செய்த வாத்தியக்கருவிகளும் ஒலிக்கருவிகளும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
சங்கத்தலைவர் பி.கிருஸ்ணகுமார் ஏற்புரைவழங்குகையில் விழியில்லாத எங்களை வழிநடாத்த விழியுள்ளவர்கள் இவ்வுதவிகளை வழங்குவதையிட்டுநன்றிகூறுகிறேன். குறிப்பாக தவிசாளர் ஜெயசிறில் அண்ணாவின் ஏற்பாட்டில் காரைதீவில் நடைபெற்ற வெண்பிரம்புதின நிகழ்வு எங்களுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத பதிவாகும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -