கலாநிதி. சிராஸ் தலைமையில் அலையாய் திரண்ட பெண்கள்!!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து 12/11/2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாபெரும் மகளிர் கருத்தரங்கு முன்னாள் முதல்வரும், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும், அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆயிரத்துக்கு அதிகமான தாய்மார்கள், சகோதரிகள் என பலர் கலந்து கொண்டதோடு இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம் ஜவாத், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், நுகர்வோர் அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.தாஹிர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பனர் எச்.எம்.நபார், எம்.யு.எம் நியாஸ், அ.இ.ம.கா.இளைஞர் அமைப்பாளர் பி.எம்.ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரமதாசாவுக்கு ஏன் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவூட்டல்களை வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...