மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டப்பிரிவுக்கான நடமாடும் சேவை

ஆதிப் அஹமட்-ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையொன்று இன்று(29) ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் Dr.S.M.M.S.உமர் மௌலானா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தர் C.M.ஆதம்லெப்பை,கணக்காளர் P.சதானந்தன்,கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்கான கல்விப்பணிப்பாளர் M.I.அஹ்ஸாப் உற்பட வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது ஆசிரியர்கள்,அதிபர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்துவைக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை(24) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டப்பிரிவிலும் இந்நடமாடும் சேவையானது இடம்பெற்று அங்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -