சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை


எப்.முபாரக்- 

திருகோணமலை மாவட்டத்தில், தற்போது தொடர்ச்சியாக காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதினை தவிர்த்து வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் திருகோணமலை, கிண்ணியா, மூதூர் பிரதேச மீனவர்களே இவ்வாறான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

கடலில் காற்று வேகமாக வீசுகின்றதாலும், கடல் கொந்தளிப்பு காரணமாகவும் மீனவர்கள் தமக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மீனவர்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரங்களும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே மீனவர்களாகிய தங்களுக்கு அரசாங்கம் மானியம் மூலம் உதவிகளைப் பெற்றுத் தருமாறு அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -