எமது நிருபர் நூருல் ஹுதா உமர்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அச்சத்திற்கு மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டது.
ஆனால் எதிர்வரும் காலத்தில் அவ்வாறான நிலை நாட்டில் ஏற்பட விடமாட்டோம். சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தளங்களில் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.
மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்” என மேலும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
