ஐ.தே.கட்சியின் ஆட்சியிலேயே நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது-மகிந்த

எமது நிருபர்  நூருல் ஹுதா உமர்-

யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அச்சத்திற்கு மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டது.

ஆனால் எதிர்வரும் காலத்தில் அவ்வாறான நிலை நாட்டில் ஏற்பட விடமாட்டோம். சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தளங்களில் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.

மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்” என மேலும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -