கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் தொழுகை 12.08.2019 திங்கட் கிழமை காலை 6.30 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெறவுள்ளதாக கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா, ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் தெரிவித்தனர்.
இப்பெருநாள் திடல் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வான் (றியாதி) அவர்கள் நடாத்தி வைக்கவுள்ளார்கள்.
கல்முனை அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியா, ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் இணைந்து வழமை போன்று இம்முறையும் ஏற்பாடு செய்திருக்கின்ற இத்திடல் தொழுகை உரிய நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும் எனவும் சகலரும் உரிய நேரத்திற்கு முஸல்லாக்களுடன் வீட்டில் வுழூ செய்து கொண்டு வருமாறும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
