ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை.

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் படையினரால் ஆளுநரிடம் கையளிப்பு.
னாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த முற்பது வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு நலன்கருதி படையினர் வசம் இருந்த காணிகளே இன்று படையினரால் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதற்கமைவாக முதன்மை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வகையில் 5.5 ஏக்கர் காணிகளே இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. அம்பாரை மாவட்டத்தின் பெரயநீலாவணை திருக்கோவில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி திரயாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணிகளே இதில் உள்ளவாங்கப்பட்டுள்ளது.
காணி அனுமதிப்பத்திரங்களை கிழக்கு பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவினால் உரிய ஆவணங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.
இராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச உயர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -