குப்பைகளை அள்ள குப்பைவாரிகள் இல்லை!
குப்பைகளை அள்ளுபவர்கள் றோபோக்களும் இல்லை!!
குப்பைகளை அள்ள சிறந்த திட்டங்களும் இல்லை!!!
கட்டாக்காலிகளை கணக்கேடுப்பதுமில்லை!!!!
மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பைமேடுகள் உருவாகிவருகின்றன. சாய்ந்தமருதிலும் இவ்வாறானதொரு நிலை உருவாகிவருகின்றது. வடிகான்கள் நிரம்பிவழிகின்றன. இதுபோன்று மாநகரசபையால் மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கின்றது.
நடைமுறையில் இருக்கின்ற சபை தனது பணியை ஆரம்பித்த காலம்முதல் உறுப்பினர்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் கூட்டம் கூட்டமாக பத்திரிகையாளர் மாநாடுகளைக் கூட்டி அவரை இவரும் இவரை அவரும் குறைகூறி காலத்தை வீணடித்து தனிப்பட்டமுறையில் அவரவர் பிரபலம் அடையும் முயற்சியுமே இடம்பெறுவது கசப்பான உண்மையாகும்.
மாநகரசபையின் பணிகளை முன்னெடுக்க வளப்பற்றாக்குறை காணப்படுவதாக பேசப்பட்டுவரும் இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாக்குகளைப்பெற்று சபைக்குச் சென்ற உறுப்பினர்களால் தங்கள் தாங்களது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்களை முன்னிலைப்படுத்தியதாகவோ வளங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவோ அதற்காக பத்திரிகை மாநாடு நடாத்தியதாகவோ போராடியதாகவோ தகவல் எதனையும் காணமுடிவதில்லை.
கல்முனை மாநகரசபையில் கள்ளன் பிடித்து விளையாடும் நிலையே தற்போது இடம்பெறுகின்றன. உறுப்பினர்களால் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அந்தகக் கட்சிக்காரரை இந்தக்கட்சிக்காறாரரும் இந்தக்கட்சிக்காறரை அந்தக்கட்சிக்காரரும் வசைபாடி காலத்தை வீணடிக்கும் நிலையே தற்போது இடம்பெறுகின்றது.
சாய்ந்தமருது உறுப்பினர்கள், நாங்கள் உள்ளுராட்சிசபையை பெறுவதற்காகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டு மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலிருந்து ஒதுங்கிவிடமுடியாது. அவ்வாறு ஒதுங்குவார்களானால் கொண்டுவரப்போகும் சபையை நடாத்த ஊரே இல்லாது போய்விடும்.
சாய்ந்தமருது உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபைக்குள் போராடியோ அல்லது அந்தசபையை பலவீனப்படுத்த நினைப்பவர்களுடன் ஒன்றிணைந்தே சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை என்ற தாகத்தையோ அல்லது தற்போதைக்கு ஆற்றப்படவேண்டிய பணியையோ அடைந்துகொள்ள முடியாது போய்விடும்.
சாய்ந்தமருதுக்கான சபையை நோக்கி போராடுவதற்கான தளம் வெற்றிடமாகவே உள்ளது. அங்குவாருங்கள் போராடுங்கள். அதற்காக சபை கிடைக்கும்வரை மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டியது உங்களது கடமை என்பதிலிருந்து நீங்கள் ஒதுங்கிவிடமுடியாது.
சபைக்கான போராட்டத்தை பொதுவெளியில் இன்னும் இறுக்கமாக்குங்கள்! உள்ளுராட்சிசபையூடாக மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய திட்டங்களை முன்னிலைப்படுத்தி சபைக்குள்ளும் வெளியிலும் போராடுங்கள்!! மக்கள் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் உற்றுநோக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைக்கருத்தில் கொள்ளுங்கள்.