குடாகம கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி 15 க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

ட்டன் குடாகம கிராமத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியவில்லை என பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்

கிராமத்தை சுற்றியுள்ள தேயிலை மலைகளிலுள்ள சிறுத்தைகளே இவ்வாறு நாய்களை வேட்டையாடுவதற்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுளைவதாக தெரிவித்தனர்

கடந்த ஒரு மாத காலமாக 15 மேற்பட்ட வீட்டு வளப்பு நாய்கள் சிறுத்தையினால் கடித்து இழுத்து சென்றுள்ளதாகவும் சில நாய்கள் காயமுற்ற நிலையில் கானப்படுவதுடன் நாய்களை வீடுகளினுள்ளே தற்போது வளர்த்து வருவதாக தெரிவித்தனர்

இரவு 8 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியோர முடியாத நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் குடியிருப்பாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்

நாய்களை கடித்து இழுத்து செல்லும் சிறுத்தைகள் அருகிலுள்ள குற்குகைக்குள் கொண்டு செல்வதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -