அவன்கள் வழியில் இவன் (கவிதை)



அவன்கள் வழியில் இவன்
+++++++++++++++++++++++
Mohamed Nizous

பிர் அவ்ன் பிள்ளைகளை
பிறக்கு முன் கொன்றொழித்தான்.
கர்வம் பிடித்த இவன்
கதறிக் கதறி அழ
இருக்கும் பிள்ளைகளை
இரக்கமின்றிக் கொல்கிறான்.

நும்றூத் நெருப்பெரித்தான்
நொந்து போகக் கொல்வதற்காய்-இந்த
வம்பனும் எரிக்கின்றான்
வானத்தால் குண்டு போட்டு

அபூஜஹில் கந்தக்கில்
அந்நியருடன் படையெடுத்தான்.-இந்த
ஆஷாத்தும் அழிப்பதற்காய்
அடுத்தவனை அழைக்கின்றான்.

சரித்திரம் சொல்கிறது
சதிகார வெறியர்கள்
இறுதியில் என்ன ஆனார்
எப்படி இழிந்து போனார்

அவன்கள் வழியிலேயே
இவனும் அழிந்து போவான்
எவனும் அநீதி செய்தால்
இறுதியில் இழிவே மிஞ்சும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -