அட்டன் முன்னாள் நகரசபை உறுப்பினர் யோகேந்திரன் மோட்டர் சைக்கிள் விபத்தில் கண்டி வைத்தியசாலையில் அனுமதி.


க.கிஷாந்தன்-
ட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் யோகேந்திரன் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் அஜந்தா விடுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது 14.01.2018 அன்று இரவு 10.00 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் வீதியினை கடக்க முற்படும் போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த யோகேந்திரன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.






இந்த விபத்தில் மோட்டார் சைக்கிலினை செலுத்திய நபரும் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -