க.கிஷாந்தன்-
அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் யோகேந்திரன் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் அஜந்தா விடுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது 14.01.2018 அன்று இரவு 10.00 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் வீதியினை கடக்க முற்படும் போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த யோகேந்திரன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த யோகேந்திரன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிலினை செலுத்திய நபரும் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.