ஓட்டமாவடியை முஸ்லிம் காங்கிரஸை கைப்பற்றும் - முன்னாள் முதலமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,வாழைச்சேனை
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் கொண்ட சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை ஆட்சி மாறும். இதற்கான அனைத்து வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.

நேற்று 20.10.2017ம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச பிரிவுகளுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள், அமைப்புக்களுக்கு தனது மாகாண சபை நிதியொதுக்கீட்டில் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்,

மக்கள் ஆணையின் மூலம் மாகாண சபையின் 5 வருட ஆட்சிக்காலத்தை மிகச்சிறப்பாகச் செய்து முடித்துள்ளமை நல்லாட்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

ஆரம்ப காலங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாலாகக் காணப்பட்ட கோறளைப்பற்று மேற்கு எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் எனது வருகைக்குப் பிறகு பலமான முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக மாறி வருவது யாவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் கொண்ட சபையாக ஓட்டமாவடி சபை ஆட்சியமைக்கும் என்பது நிச்சயம். இதற்கான அனைத்து வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை இன்று கலையும் நாளை கலையும் என்று கனவு கண்டவர்கள் எதைச்சாதித்துள்ளார்கள்? மக்கள் ஆணையின்படி உரிய காலத்தில், உரிய நேரத்தில் மாகாண சபை காலம் முடிவடைந்து. நாங்கள் ஒப்படைத்துள்ளோம்.

ஆனால், மாகாண சபை ஒப்படைத்து சுமார் இருபது நாட்கள் தான் சென்றுள்ளன. இந்த மாகாணத்திலுள்ள பட்டதாரி நியமனங்களில் அநீதி இடம்பெற்றுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ள எமது மாகாணத்தில் பட்டதாரிகள் சிறு தொகையினருக்கு மத்திய அரசாங்கத்தினால் வெளி மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை மிகப்பெரும் அநீதியாகும்.

எமது வளங்களை ஒரு போதும் விட்டு்க்கொடு்க்க முடியாது. இதானேலேயே நான் கெளரவ ஆளுநருக்கு எழுத்து மூலமாக பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். எமது மாகாணப்பட்டதாரிகள் இம்மாகாணத்திற்குள்ளே நியமிக்கப்பட வேண்டும்.

அத்தோடு, பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு தான் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் அறிமுகப்படுத்திய குறிப்பிட்ட நிதி தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். அத்தோடு, மக்களின் ஜனநாய உரிமையான தேர்தலை அரசாங்கம் பிற்போடாமல் உடனடியாக நாடாத்த வேண்டுமென்று பல வேண்டுகோள்களை விடுத்துள்ளேன் என முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அத்தோடு, குறித்த நிகழ்வு கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் அவர்களில் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -