ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக விசேட துஆ பிரார்த்தனை

திடீர் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. 

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாசல், சிகரம் ஜும்ஆ பள்ளி, காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளி, ஏறாவூர் ஷாபி பள்ளிவாசல், பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்,புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் என பல்வேறு இடங்களில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆரோக்கியத்துக்காக விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. 

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசல் நிர்வாகம் என்பன இணைந்து மெத்தைப் பள்ளிவாசலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடாத்திய விசேட துஆ பிரார்த்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 

அதேபோன்று, சிகரம் ஜும்ஆ பள்ளிவாசல் , ஏறாவூர் ரஹ்மத் நகர் ஷாபி பள்ளிவாசல், பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றிலும் நடைபெற்ற விசேட துஆ பிரார்த்தனைகளில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். 

அத்துடன், காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசேட துஆ பிரார்த்தனையிலும் அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -