சட்ட திருத்தங்களில் நல்லாட்சி அரசின் திருவிளையாடல் .

வ்வரசு, மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை மொழிக்குமொழி வேறுபாடுடைய கருத்துக்களை தெரிவிக்கும் வண்ணம்அமைத்து சட்டத்தில் விளையாடுவதானது ஆபத்தானவிளைவுகளை ஏற்படுத்தும் என ஹம்பாஹ்தோட்டைபாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் அவர் மேலும்தெரிவிக்கையில்...

தற்போதைய அரசாங்கமானது மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தை மிக அவசரமாக கொண்டுவந்திருந்தது.ஒரு சட்டம்என்பது மிக நீண்ட கலந்துரையாடலின் பின் கொண்டுவரப்படல்வேண்டும்.அது ஒன்றுக்கு இரண்டு முறை கலந்துரையாடப்பட்டேஇறுதியில் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.அவ்வாறு எதுவும்இச் சட்ட மூலம் கொண்டுவரப்படும் போது பார்க்கப்படவில்லை.

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் ஒவ்வொரு மொழிப்பிரதியிலும் வெவ்வேறு கருத்துடைய வார்த்தைகள்உள்ளடக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் சில வார்த்தைகளேஇல்லை. இதுவே இச்சட்டத்தின் தரத்தை அறியபோதுமானதாகும்.சிங்கள மொழியில் கூறப்பட்டுள்ளதே சரியானவடிவம் என பாரம்பரியமாக கடைப்பிடித்து வரப்படும்சட்டத்துக்கு இத் திருத்தத்திலேயே வேலை வந்துள்ளது.

பொதுவாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் சிங்கள மொழிஅறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எவ்வாறு இச்சட்டங்களை விளங்கி கொள்வது.அவர்கள் இச் சட்டத்தைதெளிவாக அறிய சிங்களம் படிக்க வேண்டும்.இது சாத்தியமா?ஏன் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் கூட சிங்களமொழி மூலத்தை விளங்க முடியாதவர்கள் உள்ளனர்.

மொழி மூல வரைபுகளில் உள்ள மாற்றங்கள் மக்களைஏமாற்றுவதற்கான செயலாகவுமிருக்கலாமென நம்பப்படுகிறது.சட்டங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விளையாட்டுக்கள்பாரிய ஆபத்துக்களை தோற்றுவிக்கும் என்பதைஇவ்வாட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -