பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இராணுவத்தினரால் கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு நிகழ்வு



ஹஸ்பர் ஏ.எச்-
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை தம்பலகாமம் இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி கலந்து கொண்டு நடாத்தினர்.
கிளீன் ஸ்ரீலங்கா என்பது வெளிச் சுற்றுப் புறச் சூழலை மாத்திரம் சுத்தம் செய்வதல்ல சமூக பொருளாதார துறையில் மாற்றங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது வளவாளராக கலந்து கொண்ட இராணுவ உயரதிகாரியால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :