அரசியல் அமைப்பு 20வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள்- கி.மா.சபை பிரதி தவிசாளர் பிரசன்னா

அனா-

ரசியல் அமைப்பு 20வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள். விளக்கமுடையவர்கள் என ஒரு தரப்பும் . அதனை ஆதரிக்காதவர்கள் அறிவற்றவர்கள் .விளக்கமில்லாதவர்கள் என மறு தரப்பும் தற்போது அரசியல்வாதிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பண்டி மன்றத்திற்கான தீர்ப்பை மக்கள்தான் நடுவர்களாக நின்று வழங்க வேண்டும் ' என்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு கருவப்பன்கேனி கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் சுற்று போட்டி நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய வேளை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்

பாராளுமன்றத்தில் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ள அரசியல்யாப்பு 20 வது திருத்தத்தில் மட்டுமல்ல அதில் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் மாற்றங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஓரிரு விடயங்கள் இருப்பதால் தான் கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பு 20வது திருத்தம் தொடர்பான விவாதத்திலும் வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளாமல் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தேன். இதன் காரணமாக நான் விமர்சனங்களையும் தொடர்ந்தும் எதிர் கொண்டுள்ளேன்.

மாகாண சபைகளுக்கு ஓரே நாளில் தேர்தல்களை நடத்தும் வகையிலான திருத்தம் என்ற போர்வையில் மத்திய அரசு அரசியலமைப்பு 20வது திருத்தம் மூலம் மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் தீர்மானிக்கும் வகையில் அந்த திருத்தத்தை கொண்டு வர முற்பட்டது. அதனை வடக்கு உட்பட அநேகமான மாகாண சபைகள் எதிர்த்தன. உச்ச நீதிமன்றத்தில் அதனை சவால்க்கு உட்படுத்தி 10ற்கும் மேற்பட்ட மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

20வது திருத்தம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்கு வர முன்னதாகவே அதற்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் நான் தனி நபர் பிரேரணையொன்றை முன் வைத்த வேளை அது கோரமின்மையால் விவாதிக்கப்படவில்லை.

தற்போது நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அரசியல் யாப்பு 20வது திருத்தத்தில் முன் வைக்கப்பட்ட திருத்தம் மூலம் பாராளுமன்றத்திற்கு கிடைக்கவிருந்த அந்த அதிகாரம் மீளப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே தவிர திருத்தில் திருத்தம் என கூறப்படும் விடயங்கள் அதிகாரபுர்வமாக எமக்கு கிடைக்கவில்லை.

உத்தேச 20வது திருத்தத்தில் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்படுமானால் 20வது திருத்தத்தை ஆதரிப்பதாக கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக மக்கள் குழப்பமடைந்தவர்களாவே இருக்கின்றார்கள். மாகாண சபை எதிர்பார்க்கின்ற திருத்தங்கள் இடம் பெறா விட்டால் அந்த தீர்மானத்தை மீளப் பெறும் தீர்மானத்தை மாகாண சபை நிறைவேற்றுமா ? என மக்கள் எழுப்பும் வினா நியாயமானதாகவே தென்படுகின்றது.

20வது திருத்தம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எந்தெவொரு முடிவுக்கும் வரமுடியாது. குறிப்பாக வட மாகாண சபை 20வது திருத்தத்தை நிராகரித்து திருத்தங்களுடன் மீண்டும் முன் வைக்கப்பட்டால் பரிசீலிக்க தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அது போன்ற நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு ஆகும்.

20வது திருத்தத்தில் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திருத்தத்தில் குறிப்பாக ஓரு மாகாண சபை 5 வருட பதவிக் காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டால் எஞ்சிய காலத்திற்கு இடைத் தேர்தல் என்றும் எஞ்சிய ஆட்சிக் காலம் 18 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சிறுபான்மை மக்களின் அதிகாரத்திலுள்ள கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரை 18 மாதங்கள் என்ன ? 18 நாட்கள் கூட ஆளுநரின் கீழ் அதிகாரம் இருக்கக் கூடாது. இதனால் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய திருத்தமும் அல்ல. கடந்த காலங்களில் ஆளுநர் அதிகாரம் மாகாண சபையில் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருந்தது என்பதை அனுபவரீதியாக எமது மக்களுக்கு புரியும்.

20வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள் . விளக்கமுடையவர்கள் என ஒரு தரப்பும் . அதனை ஆதரிக்காதவர்கள் அறிவற்றவர்கள் .விளக்கமில்லாதவர்கள் மறு தரப்பும் தற்போது அரசியல்வாதிகளுக்கிடையில் பட்டி மன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்குரிய தீர்ப்பை மக்கள் தான் நடுவர்களாக நின்று வழங்க வேண்டும் ' என்றும் அவர் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -