மு.கா. மூத்த போராளி இப்றா லெப்பையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால மூத்த போராளி வாழைச்சேனையைச் சேர்ந்த இப்றா லெப்பை ஜே.பி. அவர்களின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்ததாகவும், அவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக செய்த அரும் பெரும் பணிகளையும் - சேவைகளையும் நனறியுனர்வுடன் நினைவு கூறுவதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குவதற்கு 1987ஆம் ஆண்டு தொடக்கம் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடும், எம்மோடும் இணைந்து அரும்பாடுபட்ட ஒருவர் இப்றா லெப்பை. அவர் கட்சியின் வளர்ச்சிக்காக செய்த அர்ப்பணிப்புக்கள் காரணமாக 1990ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரபினால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு உழைத்த ஒருவர் இப்போது மரணமடைந்துள்ளார். 

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவரின் கப்ரை சொர்க்க பூஞ்சோலையாக ஆக்குவதற்கு துஆ செய்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருளையும் ரஹ்மத்தையும் வழங்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்திப்போமாக – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -