இதற்கமைவாக நாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில் வௌ்ளத்தால்பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை உடையவர்களுக்கான கட்டடப் பொருட்கள்கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
இதனடிப்படையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட 9 மில்லியன்ரூபா செலவில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
நாளைய தினம் காலை 10 மணியளவில் தெனியாய பிட்டபெத்தர பிரதேச செயலகம் மற்றும் தெனியாயகொட்டபொல பிரதேச செயலகம் ஆகியவற்றில் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்துகட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயர் மட்ட அரச அதிகாரிகளும்இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.