safnee ahamed
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் திருகோணமலை சுகாதார பிராந்தியத்தின் கீழ் கிளிவெட்டி, வேருகல போன்ற பிரதேசங்களில் அம்மக்களின் தேவையகளை அறிந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு வைத்தியசாலையை மக்களிடம் கையளித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் துறைரட்ன சிங்கம், கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் வைத்தியர் ஸ்ரீதர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர்களான ஹுசைனுடீன், ஷியாகுல் ஹஹக், வெருகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தயாபரன், உள்ளிட்டவர்களுடன் வைத்திய அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர். 05 இலட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவ்வைத்தியசாலைக்கான வைத்தியர்களும், தாதியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் குறைந்த நிதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டாலும் சுதேச வைத்தியத்துறை அபிவிருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தற்போது சுகாதாரத்துறையின் சேவைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சுகாதார சேவைகளை மக்களிடன் மிக பொறுப்பான கடமையாக அர்ப்பணித்து வருகின்றோம்.
மேலும், நல்லாட்சி அரசினால் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்ற போது மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவினால் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்காக விசேட திட்டங்களும் முன்வைக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் குறைந்த நிதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டாலும் சுதேச வைத்தியத்துறை அபிவிருத்தியடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தற்போது சுகாதாரத்துறையின் சேவைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சுகாதார சேவைகளை மக்களிடன் மிக பொறுப்பான கடமையாக அர்ப்பணித்து வருகின்றோம்.
மேலும், நல்லாட்சி அரசினால் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்ற போது மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தனவினால் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்காக விசேட திட்டங்களும் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் அதிக கரிசணையுடன் செயற்பட்டு சுகாதார சேவையை வழங்குவதற்காக நாம் அதிக ஈடுபாட்டுடன் செயற்படுவதுடன் சிறுபான் சமூகத்திற்கு கிழக்கு மாகாண முழுவதும் சுகாதார அபிவிருத்தியை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தார்.