ஹம்ஸா கலீல்-
பொத்துவில் ஜனாசா நலன்புரி சங்கத்தினால் பொத்துவில் மக்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் ஜனாசாவை கொண்டு செல்வது அது தொடர்பான தேவைகளுக்கு என பயன்படுத்துவதற்கு ஐனாசா வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு உதவி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,
இராஜாங்க அமைச்சர் அவர்களினால் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் அனுசரணையில் சுமார் 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலை நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை இராஜாங்க அமைச்சர் அவர்களின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொத்துவில் உலமாக்கள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
மிகுதியான தொகையினை சேகரித்துள்ளதாகவும் அமைச்சர் அவர்களுடைய மிகப்பெரிய பங்களிப்பு இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்ததாகவும், இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு பொத்துவில் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஜனாசா நலன்புரி சங்கத்தினுடைய தலைவர் அவர்கள் இந் நிகழ்வின் போது தெரிவித்தார்.