இன்று கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கல்முனையில்ஆரம்பம்!






காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழினுட்பக்கல்வி முள்பள்ளிக்கல்வி விளையாட்டு
பண்பாட்டலுவல்கள் இளைஞர்விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற
அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாஇன்று (31)
திங்கட்கிழமை கல்முனையில் கோலகலமாக ஆரம்பமாகியது.

இன்றுதொடக்கம் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்விழா கல்முனை உவெஸ்லி
உயர்தரக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இன்றுதிங்கட்கிழமை காலை பண்பாட்டுப்பேரணி சிறப்பாக

நடைபெற்றது. இப்பேரணி காலை 8மணியளவில் மருதமுனை அல்மனார் பாடசாலை
முன்றலிலிருந்து ஆரம்பித்து கல்முனை பிரதானவீதியூடாக கல்முனை
பஸ்தரிப்புநிலையத்தை அடைந்து பொலிஸ்நிலையம் மற்றும் மாகரசபை வீதியூடாக
உவெஸ்லியை சென்றடைந்தது.

பேரணியின்போது பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிகள் தமிழின்னியம்
பண்பாட்டுடையிலான மாணவர்கள் வேடபுனைவு வைத்தியசாலைகளின் ஊர்திகள்
தமிழன்னையின் ஊர்தி என்பன வலம்வந்தன.
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி அமைச்சின் இணைப்பாளரும்
கிழக்குமாகாணசபைஉறுப்பினருமான கே.வெள்ளிமலை பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்
கலைஞர்கள் எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.

பண்பாட்டுப்பவனியை விதியெங்கும் நின்ற மக்கள் கண்டுகளித்தனர்.

பவனி வந்தடைந்ததும் அங்கு ஆய்வரங்கு ஆரம்பமானது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -