யு.ஆ. கீத்-
தன்னினைச்சேர்க்கையாளர் சட்டம் மூலம் ஜக்கிய தேசிய கட்சியே கொண்டுவந்தது. சுதந்திரகட்சியானது நாட்டின் கலாச்சாரத்திற்கு முரன்பாடான சட்டங்களை எப்போதும் கொண்டுவராது, அப்படியான சட்டத்தை கொண்டுவருவதற்கு இடம் அளிக்கமுடியாது என திருகோணமலை பஸ் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு கொண்டாட்ட பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வெளியோ வந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பொது நிர்வாக அமைச்சர் திரு.சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.
மேலும் அவர் பாராளமன்றத்திற்கு இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை தனக்கு தெரிந்த வகையில் அமைச்சரவைக்கு கொண்டுவந்ததாகவும் இச்சட்டமுலம் கொண்டுவரப்படும்போது தான் அங்கு இருக்கவில்லையென்றும் அவ்அமைச்சரவையில் வைத்தே ஜனாதிபதி அவர்கள் அதனை நிராகரித்து விட்தாகவும் எனக்கு தெரியவந்தது என தெரிவித்தார்.
மேலும் தனக்கு தெரிந்து நாட்டின் வெளிவிவகாரம் பார்க்கும் அமைச்சர் ஒருவரே கொண்டுவந்தக அறியமுடிந்ததாகவும் ஜக்கிய தேசிய கட்சி கொண்டுவந்நதாக அவர் தெரிவித்தார்.