அரசியல் கட்சிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டின - அமைச்சர் ராஜித

அரசியல் கட்சிகளே நாட்டில் இனவாதத்தை தூண்டின என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இனவாதம் பற்றி பேசும் எவரும் பௌத்தர்களாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

130 மில்லியன் ரூபா செலவில் பேருவளையில் நிர்மாணிக்கப்பட்ட ஐ.எல்.எம். சம்சூதீன் வித்தியாலய புதிய கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் சமூக முறைமையில் மாற்றம் கொண்டுவரவே அரசாங்கம் அமைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் ஊடாக பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் சமாதானத்தை நிலைநாட்ட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானத்தை உருவாக்கக்கூடிய தலைவர் ஒருவர் நாட்டில் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -