ஜுனைட் .எம்.பஹ்த், சஜா-
காத்தான்குடி யில் சூடு வைக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் இன்று (15)ஹருத்தாலுக்கு அழைப்பு துண்டுப்பிரசுரம் சற்று நேரத்திற்கு முன்பாக காத்தான்குடியில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இச் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டு இன்று காலை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் வளர்புத்தாய் ஆகியோரை மார்ச் 28 ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

