புங்குடுதீவு மாணவியின் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர்களை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இவ் உத்தரவரை நீதவான் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதவான், சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு கின்றீர்களா ? என கேட்ட போது, தம்மை பலரும் குற்றவாளியாக பார்கின்றனர் இதனால் எமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மதிப்பிழந்து உள்ளனர் என சந்தேக நபர்களில் ஒருவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த நீதவான் இந்த வழக்கில் குற்றவாளிகள் இனம் காணப்படும் வரையில் நீங்கள் சந்தேக நபர்களே. இந்த வழக்கு பாரிய குற்ற செயல் என்பதாலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாலும் வழக்கு விசாரணைகள் தாமதமாகின்றது என தெரிவித்தார்.

