ஜனாதிபதி ஜனாதிபதி மாளிகையிலும் பிரதமர் அலரி மாளிகையிலும் வசிக்கவில்லை என்பதால், அவற்றில் இருக்கும் பதுங்குகுழி மாளிகைகள் தொடர்பில் சிக்கல்கள் எதுவுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் மாளிகை அல்லது பதுங்குகுழி பற்றி ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.
எவ்வாறாயினும் தற்போது தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி கூட அப்படியான மாளிகை இருந்தால் நான்றாக இருக்கும் என எண்ணக் கூடும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
