தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அல்ல என முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு மாணவனே தவிர கொழும்பு பல்கலைக் கழகத்தின் ஊழியர் இல்லை எனவும் அவர் தனது பேஸ் புக் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ஊழியர்கள் பட்டியலில் ரோஹித ராஜபக்சவின் பெயர் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
அதேவேளை பட்டமேற்படிப்பு மாணவர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோஹித ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழக ஊழியர் என செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தகது.
