அடுத்தாண்டு தை மாதத்தில் இருந்து நாட்டின் தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இலங்கையர்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, தற்போது பாவனையில் உள்ள தேசிய அடையாள அட்டை, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையாக மாற்றப்பட்டு விநியோக்கிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியாள் அடையாளத்தினை விரைவாக அடையாளப்படுத்திக்கொள்ள, இவ் இலத்திரனியல் அடையாள அட்டை மிக அதிகமாக உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
