தமிழக மீனவர்கள் நுழைவதை தடுக்க இலங்கை ரோந்துக் கப்பல்கள் குவிப்பு..?

ந்திய மீனவர்கள் எல்லை தாண்டி பிரவேசிப்பதைத் தடுக்க இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் மீன்பிடி தடை காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. 

இதைத் தொடர்ந்து நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான படகுகளில் தமிழக மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் எந்த நேரத்திலும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியை கடந்து தங்களுடைய பகுதிக்குள் நுழையலாம் என்று இலங்கை கடற்படை கருதுகிறது. 

இதனால், இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் புகுந்து மீன் பிடிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

குறிப்பாக, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக சில பெரிய ரோந்து கப்பல்களையும், 10 அதிநவீன விரைவு படகுகளையும் சர்வதேச எல்லைப்பகுதிக்கு கொண்டு வந்து இலங்கை கடற்படை நிறுத்தி உள்ளது என தமிழக ஊடகமான மாலைமலர் செய்தி வௌியிட்டுள்ளது. 

சர்வதேச எல்லையைக் கடந்து இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க நுழையும் தமிழக மீனவர்களை முற்றிலுமாக தடுக்கும் நோக்குடன் இலங்கை கடற்படை இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -