சம்மாந்துறை றுமைஸ்-
மொரட்டுவை பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தினால் எதிர்வரும் 15.04.2015 புதன் கிழமை மற்றும் 16.04.2015 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைக்கும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 2015 ம் ஆண்டின் அதாவது இந்த வருடம் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் மற்றும் 2016 ம் ஆண்டில் அதாவது அடுத்த வருடம் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இரசாயனவியல் பாடத்திற்கான இலவச கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக கற்பித்தல் அனுபவமிக்க பொறியியல் மற்றும் வைத்திய துறை பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
.jpg)