முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அடுத்த தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரி.பி.ஏக்கநாயக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சாதகமான பதிலை தந்ததாக ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
நன்றி அ.தெ.
