பாத்திமா ஹம்தா ஸீனத்-
மருதமுனை கல்வி, கலை, இலக்கிய, சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞரும், கல்வியா ? காதலா ? திரைப்பட இயக்குனரும் கவிஞர் அல்லாமா இக்பால் கலைக் கழகத்தின் இஸ்தாபகருமான ஏ.எல்,ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்) அவர்கள் கலை. இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி நேற்று (12-04-2015) கௌரவிக்கப்பட்டார்.
மன்றத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மன்றத்தின் ஆலோசகரும் கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரியுமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார். விஷேட அதிதியாக கல்வியா ? காதலா ? திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம் கலந்து கொண்டார்.
அதிதிகளாக மன்றத்தின் செயலாளரும், ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.சினாஸ். மன்றத்தின் உறுப்பினரும் நாடகக் கலைஞருமான ஏ..எல்.சபுறுத்தீன் (நெய்னா முகம்மட்) ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பல்துறைக் கலைஞர் ஏ.எல்,ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்) அவர்களுக்கு திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ், திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)