புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது - ராஜீவ விஜேசிங்க

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என லிபரல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இறுதியில், அந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றுவதற்குhக இந்த அரசாங்கத்தை நியமிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் தொடர்பிலும் திருப்தி அடைய முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -