புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என லிபரல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இறுதியில், அந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றுவதற்குhக இந்த அரசாங்கத்தை நியமிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள் தொடர்பிலும் திருப்தி அடைய முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
