அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றப்பட்ட உணவு கருத்தரங்கு





நிஸ்மி, அக்கரைப்பற்று-

க்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) நேற்று முன்தினம் (07.11.2014) வெள்ளிக்கிழமை கல்விப் பொதுத்தராதர. உயர்தர வகுப்பில் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் உயிரியல் செயற்பாட்டு தொழில் நுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றப்பட்ட உணவு ((Genetically Modified food ) ) என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கொன்று நடைபெற்றது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆயிஷா மகளிர் மஹா வித்தியாலயம், அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயம், ஆர்.கே.எம்.கல்லூரி, ஆர்.கே.எம்.வித்தியாலயம் முதலிய ஐந்து பாடசாலைகளிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் உயிரியல் விஞ்ஞானம் மற்றும் உயிரியல் செயற்பாட்டு தொழில் நுட்பப் பிரிவுகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கில் ரஜரட்ட பல்கலைக்கழக விவசாய பீடத்தின் தாவரவியல் விஞ்ஞான திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சீ.முஹம்மட் ஸகீல் (எம்எஸ்ஸி,எம்.பில்)அவர்கள் கலந்து கொண்டு பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றப்பட்ட உணவுகள் (Genetically Modified food ) சம்பந்தமாக விளக்கங்களை வழங்கினார்.

நிகழ்வில் ரஜரட்ட பல்கலைக் கழக நிதியாளர் எம்.ஐ.பஸில், உயர் தரம் கற்பிக்கும் ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்
இறுதியாக மாணவர்களின் சந்தேகங்களுக்கும் சிரேஷ்ட விரிவுரையாளர் போதிய விளக்கங்களை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :