ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபாவுக்கு 3மாடி




பைஷல் இஸ்மாயில்-

னாதிபதியின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா நிதியில் 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கௌரவ அதிதியாக வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அறபா வித்தியாலய 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கலினை பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர் இணைந்து நாட்டி வைத்து கட்டிட ஆரம்ப பணிக்கான துஆப் பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :