வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம் வழங்க நடவடிக்கை



ஹாசிப் யாஸீன்-

ம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதியின்ஆலோசனைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர்மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

காரைதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயப் பிரதிநிதிகளை அமைச்சர்தலைமையிலான குழுவினர் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின்இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிரின் அழைப்பின் பேரில் வருகைதந்த விவசாய அமைச்சர் மகிந்தயாப்பா அபேவர்த்தன மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தில் விவசாயப்பிரதிநிதிகளைச் சந்தித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதன்போது விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் விவசாயிகளின் குறைபாடுகள் பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போக நெற் செய்கைக்காக விதை நெல்நிவாரணமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தனதெரிவித்தபோது ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டவுள்யூ.டீ.வீரசிங்க உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளும், விவசாய மற்றும் கமநலத் திணக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சா் உள்ளிட்ட குழுவினா் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நா ட்டி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :