விரைவில் மலையக மாணவர்கள் பெரும்பாண்மைச் சமுகத்தினருடன் சமமான கல்வியை எட்டிவிடுவார்கள்





அஹ்ரப் ஏ சமத்-

லையக மக்களது கல்வி அபிவிருத்திக்கென கொழும்பில் வாழும் செட்டியார் தெரு, மற்றும் கடை ஊழியர்கள் இணைந்து ஆரம்பித்த இந்த கல்வி நிறுவனம் மலையக மாணவர்களுக்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. 

இன்று பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இவ் அமைப்பின் 8வது ஆண்டுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொழும்பு கோட்டையில் உள்ள மலையக வியபாரிகள் நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த 8 வருடமாக மலையக மாணவர்களுக்கு பாரிய கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களுக்கு சிறுதொகைப் பணம் வழங்கி அவர்களை பட்டப்படிப்பை தொடர்வதற்கு உதபுகின்றது. 

மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விட்டு கொழும்பில் கடைகளின் வீட்டுவேலைகளுக்கும் வராமல் தடுத்து அவர்களை கல்விப்புலமைப்பரிசில் அளித்து கல்வியைத் தொடர உதபுகின்றது. நாட்டில் உள்ள அணைத்து பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு புலமைப்பரிசில் அளித்து வருகின்றது. 

அடுத்த ஒரு தசாப்தத்திற்குள் மலையக மாணவர்கள் பெரும்பாண்மைச் சமுகத்தினருடன் சமமான கல்வியை எட்டிவிடுவார்கள். இதற்காக ஒவ்வொரு தொழிலாளியும் தமது சம்பளத்தில் 1 வீதத்தை இந்த அமைப்ப்புக்கு வழங்கி வருகின்றனா. இந்த இயக்கத்தினை பேராசிரியர் சந்திரசேகரன் மற்றும் செட்டியார்மார்கள் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் அரங்காவலர் வீரகேசரி முகாமைத்துவம் ஆகியன உதவுகின்றன.

இன்று மலைய சமுகத்தில் இருந்து ஊடகத்துறையில் பிரகாசிக்கும் ஊடகவியலாளர்கள் இ.ஒ.கூட்டுத்தவபாணம் ஆகிய ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :