ஏ.ஜி.ஏ.கபூர் அக்கரைப்பற்று-
அக்கரைப்பற்று- அம்பாரை வீதியில் பள்ளிக்குடியிருப்பு எனும் இடத்தில் தனியுhருக்குச் சொந்தமான வெல்டிங் சொப் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (13.07.2014) விஷமிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.;
இதில் பல இலட்சக் கணக்கான ரூபா பெறுமதியான வெல்டிங் உபகரணங்கள் மற்றும் கட்டிடமும் தீயில் எரிந்து சேதமுற்றிருப்பதாகவும் இது சம்பந்தமாக் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ää கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
வெல்டிங் சொப் உரிமையாளருக்கு கடந்த திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் அயலவர்களால் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது வெல்டிங் சொப்பின் பின் ஜன்னல் உடைக்கப்பட்டு ஜன்னலினுடாக வைக்கோல் போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டு உபகரணங்கள் தீயில் எரிந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்ததாக உரிமையாளர் தெரிவித்தார். இதனையடுத்து உரிமையாளர் அக்கரைப்பற்றுப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மேற் கொண்ட விசாரணையையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த வெல்டிங் சொப் உரிமையாளரான ரி.முஹம்மத் ஐய்யூப் என்பவருக்கும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக அக் குறித்த நபர் ஐய்யூப் என்பவரை அச்சுறுத்தியதாகவும் இது தொடர்பாக ஐய்யூப் அக்கரைப்பற்றுப் பொலிஸில் குறித்த நபருக் கெதிராக முறைப்பாடு செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் இத் தீ வைப்புச் சம்பவத்தில் கொம்பிரைஷர்கிரைண்டர்கள் றில்கள் பெயினற் டின்கள் சொக்கற் செட்வெல்டிங் குச்சிகள் வானொலி செற் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.;
0 comments :
Post a Comment