உள்ளுராட்சி மற்றும் மாகாண அமைச்சு தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள வழங்களை திரட்டி மீள உபயோகித்து உச்சக்கட்ட ஏற்பாட்டினை பிரயோகித்து அதனை அடைந்துகொள்ளும் நோக்குடன் உள்ளுராட்சி நிறுவனங்களின் 3R (குறைத்தல், மீள் பாவனை, மீள் சுழற்சி) செயற்பாட்டு முறைமையினை பின்பற்றவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்திரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.
தவிசாளர் சட்டத்திரணி எம்.ஏ.அன்சில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி நிருவனங்களின் 3R செயற்பாட்டு முறைமையினை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளுவதற்கென அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவில் உள்ள 200 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு, மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் குறிப்பிட்ட பிரதேசத்தில் சேருகின்ற குப்பை கூழங்களை அகற்றுவதற்கென விஷேட நடைமுறையினை அமுல்படுத்தியுள்ளோம்.
குறிப்பாக வாரத்தின் 2 நாட்கள் அதற்கென தெரிவு செய்யப்பட்டு அந்த இரண்டு நாட்களில், விரைவில் உக்கிப்போகும் குப்பைகளை ஒரு நாளைக்கும் ஞாயிறு தினங்களில் உக்காத குப்பைகளையும் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இப் பிரதேசத்தில் உள்ள அணைத்து இடங்களுக்கும் துண்டுப் பிரசுரம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றினை மீறி கண்ட கண்ட இடங்களில் குப்பை கூழங்களை போடுபவர்களுக்கு எதிராக பிரதேச சபையினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment