இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் சிறையில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு நீதிமன்றில் பிணை வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவென 20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றபோது குறித்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெபதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :