இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க குறிப்பிட்டார்.
இதுதவிர, இந்த வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட 10 கர்ப்பிணித் தாய்மார்கள் கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இன்புளுயன்சா வைரஸ் தொற்றினை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகளை 24 மணிநேரமும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டொக்டர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, இன்புளுயன்சா வைரஸ் தொற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்புக்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
0 comments :
Post a Comment